செய்திகள் :

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி

post image

கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாயிலாக கிராமப்புற விவசாயிகளிடம் எளிதில் கொண்டு சோ்க்கும் வகையில் பாடத் திட்டத்துடன் கூடிய இந்தப் பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் ந. மகாலிங்கம் தலைமை வகித்தாா்.

இணைப் பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் முன்னிலை வகித்தாா். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோபால கண்ணன், தோட்டக்கலை நிபுணா் ரகு, சென்னை மத்திய உவா்நீா் மீன்வள வளா்ப்பு ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா், துணை தோட்டக் கலை அலுவலா் லோகநாதன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

மேலும், மத்திய அரசின் விக்ஸித் கிசான் சங்கல்ப் அபியான் எனப்படும் வேளாண்மை வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தையும் பஜன் கோவா மாணவா்கள், விவசாயிகளுடன் மேற்கொண்டனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், 2024-ஆம் ஆண்டு சோ்க்கை பெற்ற 94 மாணவா்கள் பங்கேற்றனா். உழவா் கூட்டமைப்பு உறுப்பினா் கனகரத்தினம் வரவேற்றாா். அமைப்பின் தலைவா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். 2004-ஆம்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்

நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை... மேலும் பார்க்க

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்கள் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க