செய்திகள் :

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

post image

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு கிராமத்தையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஆரம்பத்தில் ஆற்றங்கரை அருகே விளையாடி, செல்போனில் வீடியோக்கள் பதிவு செய்வதை கண்டதாகவும் பின்னர் ஆழமான பகுதிக்கு சென்ற போது அவர்களை தண்ணீர் அடித்துச் சென்றதாகவும் கூறினர்.

யமுனா ஆற்றங்கரைக்கு அருகே உள்ள பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சற்று இளைப்பாற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரைக்கு சென்று குளித்துள்ளனர். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

ஆறு பேரும் ஒரே பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள்.

இந்த சம்பவம் குறித்த தகவல் விரைவாக பரவ கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் ஆற்றங்கரைக்கு விரைந்து வந்து பார்த்துள்ளனர். உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் உட்பட மூத்த அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது ஆறு பேரும் நீரில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

"குழந்தை இறந்துவிட்டது" - அரசு மருத்துவமனை மறுத்ததால் தனியார் மருத்துவமனையில் பிரசவம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அங்குள்ள ஹசரிபாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனீஷா குமாரி என்ற கர்ப்பிணிப் பெண் ... மேலும் பார்க்க

Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திரு... மேலும் பார்க்க

நெதர்லாந்து மியூசியத்தில் `200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!' - அதில் உள்ள படம் சொல்வதென்ன?

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் ம... மேலும் பார்க்க

ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?

மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ... மேலும் பார்க்க

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது. பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ... மேலும் பார்க்க