திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்
ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது.
பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். பிறந்ததிலிருந்தே ஒரு வித்தியாசமான தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் உடலின் தோல் அடுக்கடுக்காக உரிந்து வரும் நிலையைக் கொண்டுள்ளார்.
அவர் வெயிலில் சென்றால் அதன் பாதிப்பு இன்னும் கடுமையாக இருக்குமாம். அத்தகைய வெப்பத்தைத் தணிக்க அவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


அவரது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது தாயார் கூலி வேலை செய்து அவரை வளர்த்து வருகிறார்.
பிரசாத்தின் மருத்துவச் செலவு, படிப்புச் செலவு ,வீட்டுச் செலவு அனைத்தையும் அவர் கவனித்துக் கொள்கிறார். இவ்வாறு அரிய நோயுடன் பிறந்த பிரசாத் சிறுவயதிலிருந்தே பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது தோலின் நிறமும், உடலின் அமைப்பும் வளர, வளர மாறவில்லை என்று கூறும் மருத்துவர்கள், இது ஒரு நாள்பட்ட நோய் என்றும் கூறியிருக்கின்றனர். ஆனாலும், பிரசாத் தன்னுடைய தன்னம்பிக்கையை விடவில்லை
இவரின் இந்த நிலையால் சமூகத்தின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் தனது மன தைரியத்தை அவர் விடவில்லை.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த இந்த இளைஞர், குடும்பத்தைக் காப்பாற்றக் கல்வி மீது பெரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.
குடும்பத்தை மேம்படுத்தக் கூலி வேலை செய்து படிக்கவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அவர் உறுதியுடன் இருக்கிறார்.
அவரது தாயார் ஏராளமான அரசு மருத்துவமனைகளுக்கு இந்த இளைஞரை அழைத்துச் சென்றபோதிலும் மருத்துவ நிபுணர்களால் இவரின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைக்குச் செல்ல போதிய வசதியின்மை அவர்களைத் தடுத்து விட்டது.
நட்பு வட்டாரங்கள் இல்லாமலும், சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டதாலும், கல்வியை மட்டுமே நம்பி இருக்கிறார் அந்த இளைஞர். கல்வி அவரை அடையாளப்படுத்தும் என்ற நம்பிக்கையில் அந்த இளைஞர் உள்ளார்.