செய்திகள் :

ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்

post image

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது.

பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். பிறந்ததிலிருந்தே ஒரு வித்தியாசமான தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் உடலின் தோல் அடுக்கடுக்காக உரிந்து வரும் நிலையைக் கொண்டுள்ளார்.

அவர் வெயிலில் சென்றால் அதன் பாதிப்பு இன்னும் கடுமையாக இருக்குமாம். அத்தகைய வெப்பத்தைத் தணிக்க அவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்
தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்
”தினமும் தோல் உரிந்து பாம்புதோல் போல காணப்படும் உடல்...” அரிதான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்!
அரிதான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்!

அவரது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது தாயார் கூலி வேலை செய்து அவரை வளர்த்து வருகிறார்.

பிரசாத்தின் மருத்துவச் செலவு, படிப்புச் செலவு ,வீட்டுச் செலவு அனைத்தையும் அவர் கவனித்துக் கொள்கிறார். இவ்வாறு அரிய நோயுடன் பிறந்த பிரசாத் சிறுவயதிலிருந்தே பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது தோலின் நிறமும், உடலின் அமைப்பும் வளர, வளர மாறவில்லை என்று கூறும் மருத்துவர்கள், இது ஒரு நாள்பட்ட நோய் என்றும் கூறியிருக்கின்றனர். ஆனாலும், பிரசாத் தன்னுடைய தன்னம்பிக்கையை விடவில்லை

இவரின் இந்த நிலையால் சமூகத்தின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் தனது மன தைரியத்தை அவர் விடவில்லை.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த இந்த இளைஞர், குடும்பத்தைக் காப்பாற்றக் கல்வி மீது பெரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.

குடும்பத்தை மேம்படுத்தக் கூலி வேலை செய்து படிக்கவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அவர் உறுதியுடன் இருக்கிறார்.

அவரது தாயார் ஏராளமான அரசு மருத்துவமனைகளுக்கு இந்த இளைஞரை அழைத்துச் சென்றபோதிலும் மருத்துவ நிபுணர்களால் இவரின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல போதிய வசதியின்மை அவர்களைத் தடுத்து விட்டது.

நட்பு வட்டாரங்கள் இல்லாமலும், சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டதாலும், கல்வியை மட்டுமே நம்பி இருக்கிறார் அந்த இளைஞர். கல்வி அவரை அடையாளப்படுத்தும் என்ற நம்பிக்கையில் அந்த இளைஞர் உள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திரு... மேலும் பார்க்க

நெதர்லாந்து மியூசியத்தில் `200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!' - அதில் உள்ள படம் சொல்வதென்ன?

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் ம... மேலும் பார்க்க

ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?

மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ... மேலும் பார்க்க

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க

உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிரு... மேலும் பார்க்க