செய்திகள் :

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

post image

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்த குண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோயில்களில் இன்று (ஜூன் 6) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக சிவன் கோயில் மற்றும் வெயிலுந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) மாலை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடந்தது.

இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் யாத்ராதானம் ஆகி கலசங்கள் புறப்பட்டது. தொடர்ந்து காலை 5.45 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமாகியது.

பின்னர் சுவாமி, அம்மனுக்கு மூலஸ்தான அபிஷேகமாகி, அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கர்ய ஸ்தானத்தார் சிவாச்சாரியர்கள் செய்தனர். இன்று மாலை பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி மற்றும் சுவாமி நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.

இதே போல வெயிலுகந்தம்மன் கோயிலில் நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 6.18 மணிக்கு விமான கலசங்களுக்கு அபிஷேகமாகியது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தாணிகர்கள் செய்தனர்.

இன்று இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருக்கோயில் தக்கார் அருள்முருகன், உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் ரோகிணி, அஜித், விவேக், சுபிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... மேலும் பார்க்க

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க