திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!
நடிகர் சைன் டாம் சாக்கோ விபத்தில் சிக்கினார்! தந்தை பலி!
நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.
மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சைன் டாம் சாக்கோ தனது குடும்பத்துடன் எர்ணாகுளம் நோக்கி நேற்றிரவு காரில் புறப்பட்டுள்ளார்.
இன்று காலை 7 மணியளவில் தருமபுரி அருகே பள்ளக்கோட்டை பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
காரின் மையப்பகுதியில் அமர்ந்திருந்த டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ விபத்தில் பலியானார். நடிகர் டாம் சாக்கோ உள்பட மற்ற அனைவரும் பள்ளக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நடிகர் டாம் சாக்கோவுக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த டாம் சாக்கோ?
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சைன் டாம் சாக்கோ, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சர்ச்சைகள்
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜன. 30-ஆம் தேதி கொச்சி காவல்துறையினர் கடவந்த்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது, கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஷைன் டாம் சாக்கோவையும் அவருடன் சேர்த்து மாடலிங் செய்து வந்த ரேஷ்மா, ப்ளெஸ்ஸி, டின்சி பாபு, சினேகா பாபு ஆகிய நான்கு பெண்களையும் கைது செய்தனர்.
இதனையடுத்து, போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 2 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின், 2015, மார்ச் மாதம் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கின் விசாரணை கடந்த சுமார் பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மேற்கண்ட 7 பேர் மீதும் குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் கடந்த பிப். 11 உத்தரவிட்டது.
இதனிடையே, நடிகையிடம் போதையில் தவறாக நடந்துகொண்டதாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.