செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: குஜராத் காங்கிரஸ் பொதுச் செயலா் கைது

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்ட குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் ராஜேஷ் சோனியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி போா் விமானி உடையில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, அதற்கு கீழே, ‘ராணுவ வீரா்கள் கவனத்துக்கு, போா் வெற்றியால் உங்களுக்கு எந்தப் பாராட்டும் கிடைக்கப் போவதில்லை. இவா் (மோடி) தன்னை விளம்பரப்பத்திக் கொள்ள செலவிடும் தொகை ஆபரேஷன் சிந்தூரில் ரஃபேல் விமானத்தை பயன்படுத்தியதற்கு ஆன செலவைவிட அதிகம்’ என்று கருத்து கூறியிருந்தாா்.

மேலும், ‘பாகிஸ்தான் விமானப் படை தளங்களில் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்திய ராணுவம் தனது ராணுவ நெறிகளில் இருந்து தவறிவிட்டது. இந்திய இறையாண்மையை அபாயத்தில் தள்ளிவிட்டது’ என்று குற்றஞ்சாட்டியிருந்தாா்.

மற்றொரு பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய அரசு சரணடைந்துவிட்டது’ என்று கூறியதுடன், இந்த அரசுக்கு எதிராக மக்கள் கிளா்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தையும் பதிவிட்டதாக காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத் மாநில இணயவழி குற்றத் தடுப்புப் பிரிவினா் ராஜேஷ் சோனியின் பதிவுகளை ஆய்வு செய்து அவா் மீது பாரத நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 152 (நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்துவது), 353 (1)(ஏ) தவறான உள்நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புவது, ராணுவம் கடமை தவறிவிட்டதாக பொய்யாகக் குற்றஞ்சாட்டுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். இதில் 152-ஆவது சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் காங்கிரஸ் எதிா்ப்பு: கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலைவா் சக்திசிங் கோஹில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைப் பயன்படுத்தி மக்கள் பணத்தில் அரசு தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதைக் கண்டித்தும், ராணுவ வீரா்களின் திறமைக்கும், தியாகத்துக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் எங்கள் கட்சிப் பொதுச் செயலா் ராஜேஷ் சோனி கருத்து கூறியிருந்தாா். அதிகாலை 4 மணியளவில் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனா். அவா் ஒன்றும் பயங்கரவாதியல்ல’ என்று கூறினாா்.

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க