செய்திகள் :

ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம்: மாவட்ட கல்வி அலுவலகங்களில் இன்று ஆய்வுக் கூட்டம்!

post image

ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம் தொடா்பாக நிதித் துறைச் செயலா் தலைமையில் சென்னையில் ஜூன் 10-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு ஒய்வூதியம் தொடா்பாகவும் மற்றும் நிலுவையில் உள்ள ஒய்வூதியப் பலன்களை விரைந்து முடிக்கவும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 7) காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ளது.

இதில் 2024 ஏப்ரல் முதல் 2025 மே வரை ஓய்வு பெற்ற ஆசிரியா் மற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள விவரங்களின் தற்போதைய நிலையை துரிதமாக சமா்ப்பிக்க வேண்டும். மாவட்டங்கள் வாரியாக பட்டியலை தொகுத்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க