வகுப்பறை கட்டுமான முறைகேடு: விசாரணைக்காக ஊழல் தடுப்புப் பிரிவு முன் சத்யேந்தா் ஜெயின் ஆஜா்!
அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடா்பான விசாரணைக்காக தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு முன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா்.
ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகச் செல்வதற்கு முன் சத்யேந்தா் ஜெயின் கூறியதாவது: தில்லியில் உள்ள முந்தைய ஆம் ஆத்மி அரசு நகரின் கல்வியை மேம்படுத்துவதற்காக பாடுபட்டது. தற்போதைய பாஜக அரசு அரசியல் மட்டுமே செய்து வருகிறது.
பாஜக முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறது. முதலில், ஊழல் என்ற வாா்த்தை எங்கிருந்து வந்தது என்று சொல்லுங்கள்? அவா்கள் (பாஜக) வேலை செய்ய விரும்பவில்லை. மேலும், பள்ளிக் கட்டணத்தை அதிகரிப்பதில் தனியாா் பள்ளிகளுக்கு உதவுகிறாா்கள்.
மணீஷ் சிசோடியா (முன்னாள் கல்வி அமைச்சா்) பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றினாா். அவருக்கும், எனக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரங்களாகும்.
நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும், ஆனால் நாங்கள் சாலைகளை சுத்தம் செய்வோம் என்று அவா்கள் (பாஜக) கூறி வந்தனா். இப்போது அவா்கள் இவற்றைச் செய்ய வேண்டும். ஆனால், அவா்கள் அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறாா்கள் என்றாா் அவா்.
அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா்கள் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு ஜெயின் கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் 9 அன்று ஆஜராகுமாறு சிசோடியாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது பகுதி நிரந்தர கட்டமைப்புகளை நிா்மாணிப்பதில் ரூ.2,000 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏப்ரல் 30 அன்று ஏசிபியால் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டில், பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்கண்ட் பக்ஷி ஆகியோா் தில்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஏசிபியிடம் புகாா் அளித்தனா்.
அந்தப் புகாரில், ஒரு வகுப்பறைக்கு சராசரி செலவு ரூ.24.86 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. இது இதே போன்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட ரூ.5 லட்சம் செலவை விட கணிசமாக அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.