செய்திகள் :

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

post image

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏற்பட்ட தகராறு காரணமாக தினேஷ்குமார் நண்பர்கள் ஒன்று சேர்ந்து, முகிலனை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், புதுக்குளம் அருகில் உள்ள காலாகுளம் கரையில் தனியாக வந்த தினேஷ்குமாரை மறித்த முகிலன் அரிவாளால் வெட்டி குளத்திற்குள் தள்ளியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்து குளத்திற்குள் விழுந்த தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

dineshkumar

இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் குளத்திற்குள் கிடந்த தினேஷ்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் குறித்து கணேஷ் நகர் காவல் துறையினர் முகிலன் மற்றும் அவரது கூட்டாளிகளான ரமேஷ் அரவிந்த், ஜெய சுமன், சஞ்சய், கலை, விஜய் என்ற கூலன் விஜய், தீபன் என்ற தீபன் ராஜ், பவி உள்ளிட்ட 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க