செய்திகள் :

Shine Tom Chacko : விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்

post image

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர், சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது. இதற்கிடையில், உடல்நலமில்லாமல் ஷைன் டாம் சாக்கோ சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

கார் விபத்து
கார் விபத்து

பெங்களூருக்கு...

அதனால் தொடுபுழாவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு 10 மணியளவில் அவரது குடும்பத்தினரும் மருத்துவ சிகிச்சைக்காக எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் சேலம் அருகே காலை 6 மணியளவில் சென்றுகொண்டிருக்கும்போது, எதிர்புறத்தில் வந்த லாரி ஒன்று காரில் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ பலத்த காயமடைந்தார்.

ஷைன் டாம் சக்கோவுக்கும் கையில் பலத்த காயமேற்பட்டிருகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு லாரி அதன் பாதையில் இருந்து விலகி ஷைன் டாம் சக்கோ குடும்பத்தினர் பயணித்த கார் மீது மோதியது. மனைவியுடன் நடு வரிசையில் அமர்ந்திருந்த ஷைனின் தந்தை பலத்த காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கார் விபத்து
கார் விபத்து

விபத்தின் போது பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஷைன் டாம் சக்கோவின் வலது கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அவரது தாயார், சகோதரர், வாகனத்தை ஓட்டி வந்த உதவியாளர் ஆகியோர் லேசான காயத்துடன் தர்மபுரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

RCB வரவேற்பு: கூட்டநெரிசல்; உடுமலை இளம் பெண் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணி... மேலும் பார்க்க

Assam flood: 2.57 லட்ச மக்கள் பாதிப்பு; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு - தொடரும் கனமழை

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29-ம் தேதி முதல் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்; காப்பாற்றிய தொழிலாளர் பலியான சோகம்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பைச் சேர்ந்த பீட்டர் (58). இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் பீட்டர் தினமும் குளிக்கச் செ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி; கோயில் திருவிழாவில் சோகம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நாவிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், துளையனூர் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.இவரது மகன் உதயம் (வயது: 19). இவர், ஒரு கல்லூரிய... மேலும் பார்க்க

சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம... மேலும் பார்க்க

Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் - கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில... மேலும் பார்க்க