செய்திகள் :

RCB வரவேற்பு: கூட்டநெரிசல்; உடுமலை இளம் பெண் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

post image

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்சிபி அணி வீரர்களைப் பார்க்க சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் புதன்கிழமை மாலை குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் உடல்நசுங்கி உயிரிழந்தார்.

காமாட்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் விவேகானந்தா வித்யாலயா என்ற தனியார் பள்ளியை நடத்தி வருபவர் மூர்த்தி. இவரது மகள் காமாட்சி (28). கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆர்சிபி அணியின் தீவிர ரசிகையான இவரும் புதன்கிழமை நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அதில், கூட்ட நெரிசல் காரணமாக மேடை உடைந்ததில் காமாட்சி கீழே விழுந்துள்ளார். அப்போது, ஏற்பட்ட நெரிசலில் மற்றவர்கள் மிதித்ததில் காமாட்சி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், வேலைக்குச் சென்ற இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் காமாட்சி உயிரிழந்தது உடுமலைப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Shine Tom Chacko : விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர், சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியி... மேலும் பார்க்க

Assam flood: 2.57 லட்ச மக்கள் பாதிப்பு; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு - தொடரும் கனமழை

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29-ம் தேதி முதல் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்; காப்பாற்றிய தொழிலாளர் பலியான சோகம்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பைச் சேர்ந்த பீட்டர் (58). இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் பீட்டர் தினமும் குளிக்கச் செ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி; கோயில் திருவிழாவில் சோகம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நாவிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், துளையனூர் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.இவரது மகன் உதயம் (வயது: 19). இவர், ஒரு கல்லூரிய... மேலும் பார்க்க

சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம... மேலும் பார்க்க

Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் - கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில... மேலும் பார்க்க