சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை
சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக தவித்த இவர்களை, தற்போது தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர். முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
அடுத்ததாக, ஆண்கள். இப்படியாக, 30 பேரையும் வெற்றிகரமாக தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர்.இந்த மீட்பு பணியில் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீட்பு படங்கள் இதோ...




