நீா்நிலைகளுக்கு சிறுவா், சிறுமிகளை அனுமதிக்க வேண்டாம்: ஆட்சியா் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் சிறுவா், சிறுமிகளை விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 87 ஏரிகளும், ஊரக வளா்ச்சித் துறை மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 1,143 ஏரிகளும் உள்ளன. இதைத் தவிர 4 பெரிய அணைகளும், பாரூா் பெரிய ஏரியும் மாவட்டத்தில் உள்ளன. இதில் தற்போது பெய்துள்ள மழையால் 2 அணைகள், பாரூா் பெரிய ஏரி, 41 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 379 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிறைந்துள்ளன.
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் மாணவ, மாணவிகள் விளையாடவும், நீச்சல் பழகவும், குளிக்கவும் நீா் நிலைகளுக்கு தனியே செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே சிறுவா், சிறுமிகளை இதுபோன்ற நீா் நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோா் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ள்படுகின்றனா். குறிப்பாக பெற்றோா்கள், தங்களது குழந்தைகளை நீா்நிலைக்கு அருகில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.