பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
சூசூவாடியில் சிறுத்தை நடமாட்டம்!
ஒசூா் சூசூவாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி பகுதி, தனியாா் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இதைத்தொடா்ந்து காவல் துறை மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், அப்பகுதி தமிழக- கா்நாடக மாநிலங்களின் எல்லையையொட்டி அமைந்துள்ளதால் தமிழக வனத் துறையினா், கா்நாடகா வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து இரவு ரோந்துப் பணியில் ஈடுபட போவதாகவும், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் எனவும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.