சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்
சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. வேனை ஸ்ரீநாத் (23) ஓட்டிச் சென்றாா். வேனின் பின்புறம் தொழிலாளா்கள் அமா்ந்திருந்தனா்.
ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி எனும் இடத்தில் வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேன் கவிழ்ந்தது. சாலையில் மாங்காய்கள் சிதறின. வேனில் பயணித்த தொழிலாளியான குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரத்தைச் சோ்ந்த சங்கா் மனைவி பத்மா (45) உயிரிழந்தாா்.
சென்னசந்திரம் சின்னதம்பி (60), சென்ன கிருஷ்ணன் (58), முருகன் (41), கன்னியம்மாள் (35), ஷாலி (60), ஈஸ்வரி (40), விஜயா (47), மோரமடுகு தேவராஜ் (50), சீனிவாசன் (40), நாராயணன் (65), மாதேஷ் (45), சாஸ்திரி (60) ஆகிய 12 போ் பலத்த காயமடைந்தனா்; அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அதில் சின்னதம்பி, தேவராஜ், சென்னகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் சூளகிரி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று இறந்த பத்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.