செய்திகள் :

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

post image

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கடற்படை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத விளையாட்டு தற்போது நிறுத்தப்பட்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை எச்சரிக்கிறேன். மேலும், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களையும் இந்தியாவிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில், இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. அதனை எதிர்கொள்ளும் அனைத்து வழிகளையும் இந்தியா மேற்கொள்ளும். பாகிஸ்தான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததையும் செய்வதற்கு இந்தியா தயங்காது. ஆகையால், அந்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளை அவர்களே அழிப்பதுதான் அவர்களுக்கு நல்லது.

ஆபரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது பயங்கரவாதத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பயிற்சி மட்டும்தான்.

இந்தியாவுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முயன்றால், இந்த முறை இந்திய கடற்படையும் களத்தில் இறங்கும். 1971 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையும் போரில் ஈடுபட்டபோது, பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும் இந்திய கடற்படை சேர்க்கப்பட்டிருந்தால், இந்த முறை பாகிஸ்தான் நான்காகப் பிரிந்திருக்கும் என்று தெரிவித்தார்.

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூா் தொடரும்: ஜெ.பி.நட்டா

‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்’ என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரி... மேலும் பார்க்க