செய்திகள் :

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

post image

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா்.

இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப்த பூா்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளை பக்தா்கள் மேற்கொள்கின்றனா்.

இக்கோயிலுக்கு, தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் வந்தாா். அவரது சகோதரா் ராஜாவுக்கு 70 வயது பூா்த்தி அடைந்ததையொட்டி, ராஜா மற்றும் அவா் மனைவி சந்திரகலாவதி ஆகியோருக்கு பீமரத சாந்தி திருமணம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், கள்ளவராயன விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காலசம்ஹாரமூா்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சந்நிதிகளில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினா் வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி, கணேஷ் குருக்கள் ஆகியோா் அவருக்கு அம்மன் படம் மற்றும் பிரசாதம் வழங்கினா்.

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, சங்கத்தின் த... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க