செய்திகள் :

``ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது..'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

குற்றவாளி ஞானசேகரன்
குற்றவாளி ஞானசேகரன்

இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், "அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் யார் அந்த சார் என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? சார்-ஐ காப்பாற்றியது யார்? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாள்கள் இருக்காது. ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது'' -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்

ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், இஸ்ரேலின் கட்டுப்பாடுகளை உடைத்து காசாவுக்கு கப்பலில் நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்கிறார். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசாவுக்கு நிவாரண... மேலும் பார்க்க

Vijay-யின் பிளான், சம்பவம் செய்ய Stalin எடுத்த `மதுரை ரூட்' நோட் பண்ணும் EPS! | Elangovan Explains

திமுகவின் பொதுக் குழு கூட்டம், மதுரையில், ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அடுத்த 11 மாதங்களில், 234 தொகுதிகளுக்கும், 11 வியூகங்களை வகுத்து பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின். இதி... மேலும் பார்க்க

`திராவிட மாடல் ஆட்சி' - முதல்வரின் நம்பிக்கைக்கு காரணம் என்ன? - சரிவுகளும் சவால்களும்! | In Depth

''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." எனக் கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 1125 நாள்கள் முடிந்துவிட்டது. 2026 மே 6-ம் தேதி அவருடையப் பதவிக்காலம் முடிகிறது. சொல்லப்போனால் இன்ன... மேலும் பார்க்க

``இந்தியாவின் தேசிய மொழி எது?'' - எம்.பி கனிமொழி பதிலால் அரங்கம் அதிர கைதட்டிய குழு!

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்­றும் அதனை யாரும் புறக்க­ணிக்கக் கூடாது என்­றும் பா.ஜ.க தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை நாடு முழுவதும் கொண்டு செல... மேலும் பார்க்க

Doctor Vikatan: நுரையீரலில் சளி கோத்து, உயிர் பயத்தை தரும் மூச்சுத்திணறல்.. தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan:நுரையீரலில் சளி கோத்திருந்ததால்மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் முதியவர்கள் குறித்து அடிக்கடி செய்திகளில்கேள்விப்படுகிறோம். முதியவர்களுக்கு நுரையீரலில் ஏன் சளி கோத்துக்கொள்கிறது... ... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்..'' - ஆர்.பி.உதயகுமார்

"எங்கள் உயிருக்கும் மேலான தலைவர் எடப்பாடியாரை பற்றி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆணவமாக பேசிய ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை செய்கிறோம்.." என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சி... மேலும் பார்க்க