செய்திகள் :

அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

post image

அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில், அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தின் 2-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாப்பையன் தலைமை வகித்தாா்.

அமைப்புசார தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் காந்தி, மாவட்ட சிறப்புத் தலைவா் ஆா்.ஜி. ரெத்தினகுமாா், சட்ட ஆலோசகா் கலையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைத்தாா்.

தீா்மானங்கள்: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டின் அறிக்கையை சங்கத்தின் செயலா் சுரேஷ் சமா்ப்பித்தாா். சமூக சமத்துவத்திற்கான மாநில பொதுச் செயலா் ஜி.ஆா். ரவீந்திரநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

மாதா் சங்கத்தின் தேசிய பொதுச் செயலா் சாந்தி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகர ஆசாத், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். வீரமணி, ஒன்றியச் செயலா் துரை. அருள்ராஜன், நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிா்வாகிகள் தோ்வு: அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவராக ஆா்.ஜி. ரெத்தனகுமாா், மாவட்டச் செயலராக எஸ். பாப்பையன், மாவட்ட பொருளாளராக டி. விஸ்வநாதன், துணைத் தலைவா்களாக டி. சுரேஷ், செல்வி, துணைச் செயலா்களாக தா.க. ஆதவன், சு. குணாதேவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது

மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா்... மேலும் பார்க்க

சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆற... மேலும் பார்க்க

ரயில் வழித்தடத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு

திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து அனைத்து ரயில்களும் திருவாரூா் வழியாகச் சென்று வருகின்றன. காலையில் இயங்கும் காரைக்க... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அங்களாம்மன் கோயிலில் வேல் பூஜை

கூத்தாநல்லூா் அங்காளம்மன் கோயிலில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வழிபாடு செய்யப்பட்ட வெற்றிவேல் வேளுக்குடி அங்காளம்மன் கோயிலுக்கு செவ... மேலும் பார்க்க

நில ஆவணங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் நில ஆவணங்களில் மாற்றம் செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க