செய்திகள் :

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

post image

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை, சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க, பாஜக எம்பி ரவி சங்கர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்தக் குழுவின் உறுப்பினரான பாஜக எம்பி சாமிக் பட்டாச்சார்யா, பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டின்படி எல்லைக் கடந்த பயங்கரவாதம், பயங்கரவாதச் செயலாகவே கருதப்பட்டு அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

”பிரதமர் நரேந்திர மோடி எங்களது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார். அதாவது, வரும் காலத்தில், எல்லையைக் கடந்த பயங்கரவாதம், பயங்கரவாதச் செயலாகவே கருதப்பட்டு அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும். உலகம் தற்போது சந்திக்கும் அச்சுறுத்தல் தீவிரவாதம், சட்டவிரோத குடியேற்றம் எனும் அச்சுறுத்தலை வங்கதேசத்தால் இந்தியா சந்தித்து வருகின்றது. தற்போது இந்தியாவில் நடைபெறுவது நாளை ஐரோப்பா முழுவதும் நடைபெறலாம். எனவே, நாம் தற்போது ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தை” என அவர் பேசியுள்ளார்.

இத்துடன், இந்தக் குழுவின் உறுப்பினர், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனையின் எம்பி பிரியாங்கா சதுர்வேதி, ”இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜியநிலை சகிப்புத்தன்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க 7 அனைத்துக் கட்சிக் குழுவினர் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அதில், தற்போது பெல்ஜியம் சென்றுள்ள பாஜக எம்பி ரவி சங்கர் தலைமையிலான குழுவில், தகுபதி புரந்தேஸ்வரி (தெலுங்கு தேசம்), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனை உத்தவ் தாக்ரே பிரிவு), குலாம் அலி கட்டானா (பாஜக), அமர் சிங் (காங்கிரஸ்), சாமிக் பட்டாச்சார்யா (பாஜக), முன்னாள் மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் மற்றும் தூதர் பங்கஜ் சரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க:பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க