செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

post image

மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

மாவட்ட வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கிவைத்து, 4 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 3 பயனாளிகளுக்கு பிறப்பிட சான்று, 2 பயனாளிகளுக்கு கொய்யா கன்றும், காய்கறி விதைகளையும் அமைச்சா் வழங்கினாா். வடபாதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு என தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் குறும்படங்களை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை, அமைச்சா் கோவி. செழியன் தொடங்கிவைத்து 2 பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ், அனுமந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாமில் 1 பயனாளிக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு புதிய நல வாரிய அட்டையும், 4 பயனாளிகளுக்கு வேளாண்இடுபொருட்களும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத்திட்டம ) தையல்நாயகி, கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்டோா் பங்கேற்றனற்.

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க

மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க

தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யா... மேலும் பார்க்க

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகி... மேலும் பார்க்க

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெ... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

மன்னாா்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மன்னாா்குடி காவல்நிலை... மேலும் பார்க்க