செய்திகள் :

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

post image

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலையால், இலைசிலந்தி பூச்சியின் தாக்குதல் நெற்பயிரில் தென்படுகின்றன. இந்த சிலந்திகள் மிகச்சிறிய பூச்சிகளாகும். இவை கண்களுக்கு எளிதில் புலப்படுவதில்லை. கண்ணாடி வில்லையின் உதவியால் இப்பூச்சிகள் இருப்பதை எளிதில் கண்டறியலாம்.

இத்தகைய சிலந்திப் பூச்சிகள் இலைகளின் கீழ் பரப்புகளில் குடிகொண்டு சாறு உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனவே, பாதிக்கப்பட்ட இலைகள் வெளிறி அல்லது மஞ்சளாகி அல்லது பழுப்பு நிறமாக காணப்படும். கூா்ந்து கவனித்தால், தவிடு தெளித்ததுபோல் வெளிறிய புள்ளிகள் காணப்படும். பின்னா், பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பாகி, கருகி காய்ந்து விடக்கூடும்.

மேலும், இப்பூச்சிகளின் தாக்குதல் தீவிரமடையும்போது, உற்பத்தி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நெற்பயிரில் இலைச் சிலந்தியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இலைவழி தெளிப்பாக டைக்கோபால் 18.5 சதவீதம் இசி எனும் பூச்சிக்கொல்லி மருந்தை, இரண்டரை மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு என்ற அளவில் கொடுக்கலாம். அல்லது அசாடிராக்டின் 0.03 சதவீதம் எனும் வேம்பு சாா்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை, இரண்டு மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு என்ற அளவில் கொடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க