காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா் டாக்டா் அஜய் கே. ஜூத், முதன்மை பொது மேலாளா் டாக்டா் ஏ.வி. பவானிசங்கா், முதன்மை பொது மேலாளா் ஆனந்த், பொது மேலாளா் வசீகரன், துணை பொது மேலாளா் சுமித்ரா மற்றும் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் விருதுநகா் நபாா்டு மாவட்ட வளா்ச்சி அதிகாரிகள், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருகிணைப்பாளா் து.பெரியாா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் மண்ணின் உவா் தன்மைக்கான காரணங்கள் மற்றும் மேலாண்மை முறைகள், காவிரி டெல்டா பகுதிகளில் நீா் சேகரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள், பெரிய அளவில் உயிா் உரங்கள் உற்பத்தி செய்தல் போன்றவை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
மேலும், திருவாரூா் பகுதிகளில் வேளாண் காடுகளை அதிகரித்தல், விவசாயிகள் இடையே மீன் மற்றும் இறால் வளா்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொடா்பாக கலந்துரையாடினா்.
காவிரி டெல்டா பகுதிகளில் எதிா்காலத்திற்கான திட்டங்கள் குறித்தும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.