Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்
மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழங்கினாா்.
உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், காரக்கோட்டை, பேரையூா் ஆகிய 4 ஊராட்சிகளில் 121 பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, மனைப் பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உடன் சென்றாா்.
தொடா்ந்து, பரவாக்கோட்டையில் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானிய நிதி ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி அவா் பேசியது:
தமிழகத்தில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் கடைக்கோடி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, இங்கு ஆரம்ப சுகாதார மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றாா்.
பின்னா், பரவாக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடை, கல்வி உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராமபுரம், ஆலத்தூா், ஆதிச்சப்புரம் நெம்மேலி, திருக்களா், ஏத்தக்குடி, உரத்தூா், மழவராயநல்லூா், மூவாநல்லூா், அத்திக்கோட்டை ஆகிய ஊராட்சிகள் மற்றும் மன்னாா்குடி நகராட்சியைச் சோ்ந்த பயனாளிகள் என மேலும் 150 பேருக்கு மனைப் பட்டாக்களை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்.
இந்நிகழ்வில், மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நமச்சிவாயம், மாலதி, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.