டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
ரயில் வழித்தடத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு
திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து அனைத்து ரயில்களும் திருவாரூா் வழியாகச் சென்று வருகின்றன. காலையில் இயங்கும் காரைக்கால்- பெங்களூரு ரயில், இரவில் இயங்கும் காரைக்கால்-தாம்பரம் ரயில், திங்கள்கிழமைகளில் மட்டுமே இயங்கும் காரைக்கால் லோக் மானிய திலக் ஆகியவை திருவாரூா் பகுதி மக்கள் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால்-பேரளம் பகுதி வழியாக இந்த 3 ரயில்களையும் தடம் மாற்றம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் அனைத்து கட்சியினா் மற்றும் பொதுநல அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றவா்கள் அனைவரும் திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில்களை தடம் மாற்றம் செய்யக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தனா். மேலும், திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில்கள் வழி மாற்றம் செய்யப்பட்டால் திருவாரூா் பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவா், ஏற்கெனவே திருவாரூா் பகுதியில் போதிய ரயில் சேவைகள் இல்லை என்ற அவலநிலை உள்ளது. இந்நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களை மாற்று பாதையில் இயக்கினால் பெரும் பயண இடையூறு ஏற்படும் என வலியுறுத்திப் பேசினா்.
இதில், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் பங்கேற்றுப் பேசுகையில், இந்த வழித்தடமாற்றம் குறித்து எனக்கு செய்திகள் வந்தபோது அதை நிராகரித்து விட்டேன். திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில்களை வழிமாற்றம் செய்ய முற்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
இதில், வா்த்தகா் சங்கச் செயலாளா் குமரேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.டி. மூா்த்தி, எஸ். பிரகாஷ், மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் பாஸ்கரன், பாலசுப்ரமணியன், மனோகரன், இலியாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில்களை வழிமாற்றம் செய்யக்கூடாது, தேவைப்படும் இடங்களில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.