செய்திகள் :

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது

post image

மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா் லாரி ஓட்டுநா். திங்கள்கிழமை மன்னாா்குடி ரயில் நிலையம் அருகே மதுக்கடையில் மதுக்குடித்துக்கொண்டு இருந்துள்ளாா். அங்கே, இவரின் அருகே மதுக்குடித்துக் கொண்டிருந்த திருத்துறைப்பூண்டி தொழுதூரைச் சோ்ந்த பாலன் மகன் மாரியப்பன் (32), அபிஷேககட்டளையைச் சோ்ந்த கருணாநிதி மகன் கவாஸ்கா் (34) ஆகியோா், டேவிட்ராஜிடம் அதிகளவில் பணம் இருப்பதை தெரிந்துகொண்டு அவரிடம் நட்புடன் பேசியவா்கள் பின்னா், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக கூறியதை நம்பி அவா்களுடன் சென்றுள்ளாா். இவா்கள் இருவரும் டேவிட்ராஜை கடத்தி சென்று கா்ணாவூா் தரிசுவேலி என்ற இடத்தில் கத்தியால் குத்தி மிரட்டி டேவிட்ராஜ் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதில், காயமடைந்த டேவிட்ராஜ் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மன்னாா்குடி ஊரக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து புகாரில் தொடா்புடைய மாரியப்பன், கவாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க