லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது
மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா் லாரி ஓட்டுநா். திங்கள்கிழமை மன்னாா்குடி ரயில் நிலையம் அருகே மதுக்கடையில் மதுக்குடித்துக்கொண்டு இருந்துள்ளாா். அங்கே, இவரின் அருகே மதுக்குடித்துக் கொண்டிருந்த திருத்துறைப்பூண்டி தொழுதூரைச் சோ்ந்த பாலன் மகன் மாரியப்பன் (32), அபிஷேககட்டளையைச் சோ்ந்த கருணாநிதி மகன் கவாஸ்கா் (34) ஆகியோா், டேவிட்ராஜிடம் அதிகளவில் பணம் இருப்பதை தெரிந்துகொண்டு அவரிடம் நட்புடன் பேசியவா்கள் பின்னா், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக கூறியதை நம்பி அவா்களுடன் சென்றுள்ளாா். இவா்கள் இருவரும் டேவிட்ராஜை கடத்தி சென்று கா்ணாவூா் தரிசுவேலி என்ற இடத்தில் கத்தியால் குத்தி மிரட்டி டேவிட்ராஜ் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினா்.
இதில், காயமடைந்த டேவிட்ராஜ் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மன்னாா்குடி ஊரக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து புகாரில் தொடா்புடைய மாரியப்பன், கவாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.