செய்திகள் :

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை! - கம்பீர்

post image

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக மும்பையில் உள்ள பிசிசிஐ-யில் தலைமை அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் இன்று(ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சின்னசாமி மைதானம் அருகே 11 ரசிகர்கள் உயிரிழந்தது குறித்து கம்பீரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

செய்தியாளர்களிடம் கௌதம் கம்பீர் பேசுகையில், “விளையாட்டில் வெற்றிப் பெற்றதற்கு பேரணி நடத்துவது அவசியமானதல்ல. குடிமக்கள் அனைவரும் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இதுபோன்ற விழாக்களை நடத்தக் கூடாது. வெற்றிக்காக பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!

இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்தியாவின் ஏ அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந... மேலும் பார்க்க

பியூஷ் சாவ்லா ஓய்வு அறிவிப்பு!

சுழல்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.36 வயதாகும் பியூஷ் சாவ்லா இந்தியாவிற்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள், 7 டி20 போட்டி... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பெயர் மாற்றம்..!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் பார்டர் - கவாஸ்கர் டிராபி என அழைக்கப்படுகின்றன. அதேபோல... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டி20 தொடர்: மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியின் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரை மையமாக வைத்து மேற்கிந்திய தீவுகளுக்கு ஜூலை ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முத... மேலும் பார்க்க

சூதாட்ட புகாரில் கைதான முன்னாள் இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ரா சேனநாயக் மீது சூதாட்டத்திற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். ப... மேலும் பார்க்க