செய்திகள் :

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

post image

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆர்ஐசி (RIC) மாநாடு நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது. ரஷியாவின் முன்னாள் பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமாகோவின் முயற்சியால் ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய உச்சி மாநாடு நடத்தப்பட்டது.

இதுவரையில் 3 முறை நடத்தப்பட்ட ஆர்ஐசி மாநாடு, 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கரோனா தொற்றுக்காலத்தில் இருந்து நடத்தப்படவில்லை. இதனிடையே, இந்தியா - சீன ராணுவ வீரர்களிடையே மோதலும் ஏற்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து, விடியோ அழைப்பு வாயிலாக மாநாடு நடத்தப்பட்டிருந்தாலும், அதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியான ஆர்ஐசி மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்திருந்தது. இதனால், மாநாட்டில் சீனாவை இந்தியா சந்திக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், ஆட்டோமொபைல் துறைக்கு மூலதனமான ஒருவகை காந்தங்களை இந்தியாவுக்கு சீனாதான் ஏற்றுமதி செய்து வரும் நிலையில், ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்ஐசி மாநாட்டில் கலந்துகொண்டு, சீனாவை இந்தியா வலியுறுத்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். எதுவாயினும், மாநாட்டின்போதுதான் தெரிய வரும்.

இருப்பினும், மாநாட்டில் கலந்துகொண்டு, வர்த்தக உறவைத் தடையின்றி, தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க