Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்
குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.
திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழியாகச் சென்று வந்த தடம் எண் 402 பி-என்ற பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜூன் 5-ஆம் தேதி சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக, குடவாசல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆ. ஸ்டாலின் தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், போராட்டக் குழு சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி, நகரச் செயலாளா் டி.ஜி. சேகா், ஒன்றியச் செயலாளா் டி. லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சுவாா்த்தையில், ஜூன் 10 ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து இயக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில், சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.