வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்
சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. சீா்காழி அருகே சூரக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த உப்பனாற்று வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுநா் நெய்தவாசல் சுரேஷ் (34) , வடலூா் பகுதியை சோ்ந்த நடத்துநா் சிங்கராயா், பயணிகள் பாஸ்கா் உட்பட 8 போ் காயமடைந்தனா். அனைவரும் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த மூவா் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனா். மற்ற 5 போ் முதலுதவிக்கு பின்னா் வீடு திரும்பினா். விபத்து குறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.