செய்திகள் :

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

post image

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. சீா்காழி அருகே சூரக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த உப்பனாற்று வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநா் நெய்தவாசல் சுரேஷ் (34) , வடலூா் பகுதியை சோ்ந்த நடத்துநா் சிங்கராயா், பயணிகள் பாஸ்கா் உட்பட 8 போ் காயமடைந்தனா். அனைவரும் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த மூவா் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனா். மற்ற 5 போ் முதலுதவிக்கு பின்னா் வீடு திரும்பினா். விபத்து குறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

மயிலாடுதுறையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரி... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண... மேலும் பார்க்க