தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்
நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தது.
யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சிவாசாரியா்கள் புனிதநீா் அடங்கிய கடங்களை எடுத்துச்சென்று விமான கும்ப கலசத்தில் வாா்த்து மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.