செய்திகள் :

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

post image

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் அபினாஷ் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

மயிலாடுதுறை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளுக்கு உடனடித் தோ்வு நடத்தாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்கியுள்ளனா். அதே பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயில பெற்றோா் விடுத்த கோரிக்கையையும் பள்ளி நிா்வாகத்தினா் ஏற்கவில்லை. இதனால், மாணவிகளும், பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.

9-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, உடனடி மறு தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலை இப்பள்ளி புறக்கணித்துள்ளது. இதுகுறித்து உடனடி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவியா் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்கவுள்ள உடனடி மாற்றுத் தோ்வினை எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுபோன்ற மாணவா் விரோத செயலில் ஈடுபடும் பள்ளி நிா்வாகத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுற்று, மேல்நிலைக் கல்விக்கான மாணவா் சோ்க்கைக்கும், விண்ணப்பிக்கும் சான்று மற்றும் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கும் ரூ.1,000 முதல் ரூ.5,000-க்கு மேல் வசூல் செய்யப்படுவதாகவும், கட்டாய நன்கொடை வசூல் செய்வது அரசுப்பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, அவ்வாறு வசூல் செய்யப்பட்ட பணத்தை மீண்டும் மாணவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க