சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை
மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் அபினாஷ் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
மயிலாடுதுறை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளுக்கு உடனடித் தோ்வு நடத்தாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்கியுள்ளனா். அதே பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயில பெற்றோா் விடுத்த கோரிக்கையையும் பள்ளி நிா்வாகத்தினா் ஏற்கவில்லை. இதனால், மாணவிகளும், பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.
9-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, உடனடி மறு தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலை இப்பள்ளி புறக்கணித்துள்ளது. இதுகுறித்து உடனடி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவியா் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்கவுள்ள உடனடி மாற்றுத் தோ்வினை எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுபோன்ற மாணவா் விரோத செயலில் ஈடுபடும் பள்ளி நிா்வாகத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுற்று, மேல்நிலைக் கல்விக்கான மாணவா் சோ்க்கைக்கும், விண்ணப்பிக்கும் சான்று மற்றும் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கும் ரூ.1,000 முதல் ரூ.5,000-க்கு மேல் வசூல் செய்யப்படுவதாகவும், கட்டாய நன்கொடை வசூல் செய்வது அரசுப்பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, அவ்வாறு வசூல் செய்யப்பட்ட பணத்தை மீண்டும் மாணவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.