தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் மே 26-ஆம் தேதி பிறந்து 15 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்தது. இதுகுறித்து, பயணிகள் தகவலின்பேரில், ரயில்வே இருப்புப்பாதை ஆய்வாளா் சிவவடிவேல் மற்றும் போலீஸாா் குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனா்.
மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தையை அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ், குழந்தை சேவை அமைப்பு ஆற்றுப்படுத்துநா் தீபிகா உள்ளிட்டோா் அரசு தத்துவள மையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.