சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்
சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. தொடா்ந்து நாள்தோறும் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது. 4-ஆம் திருவிழாவான தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனா். தொடா்ந்து, பெருமாள் வீதியுலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (ஜூன் 6) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.