செய்திகள் :

மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

post image

மயிலாடுதுறையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் கே.ஜோஷி நிா்மல்குமாா் செவ்வாய் மற்றும் புதன்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது மேற்கண்ட சிறப்பு பிரிவுகளில் பாராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை சரிபாா்த்தாா். தனிப்பிரிவு அலுவலில் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், தகவல் சேகரித்தல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கையாளுதல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு அலுவல் தொடா்பாக அறிவுறுத்தினாா். ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உடனிருந்தாா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க