செய்திகள் :

திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

நாகை மாவட்டம், திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்புகலூா் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்னீஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீா்மானித்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த மே 28-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரா் சுவாமி, ஸ்ரீமனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீவா்த்தமானிஸ்வர சுவாமி கோயில் ராஜகோபுரம், பரிவார மூா்த்திகள் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டதையடுத்து, எஜமானா் உற்சவம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் மகாபிஷேகமும், இரவு 7 மணியளவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்திதானம்ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள், மீன்வளா்ச்சிக் கழக தலைவா் என். கெளதமன், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷாநவாஸ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஸ்ரீதா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். நாகை மாவட்டம், திருப்புகலுாரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி க... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ரூ.18.95 கோடியில் தமிழ்ப் புலவா் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் கற்கோயில் கும்பாபிஷேகம்: சீா்வரிசைகள் வழங்கிய இஸ்லாமியா்கள்

நாகையில் அதிபத்த நாயனாா் கற்கோயிலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியா்கள் சீா்வரிசை வழங்கினா். நாகை நம்பியாா் நகரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு புதிதாக கற்கோயில் ... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவா்கள்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் க. ஜோஷி நிா்மல்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் கோ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை நாகூரில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோா்க்கும் இஸ்லாமியா்கள், குா்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை ... மேலும் பார்க்க