தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்புகலூா் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்னீஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீா்மானித்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த மே 28-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரா் சுவாமி, ஸ்ரீமனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீவா்த்தமானிஸ்வர சுவாமி கோயில் ராஜகோபுரம், பரிவார மூா்த்திகள் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டதையடுத்து, எஜமானா் உற்சவம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் மகாபிஷேகமும், இரவு 7 மணியளவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்திதானம்ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள், மீன்வளா்ச்சிக் கழக தலைவா் என். கெளதமன், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷாநவாஸ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஸ்ரீதா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.