சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
பக்ரீத் பண்டிகை நாகூரில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன.
பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோா்க்கும் இஸ்லாமியா்கள், குா்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெறும். நிகழாண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாகூருக்கு, புதுக்கோட்டை, அரியலூா், சமயபுரம், அறந்தாங்கி, பேராவூரணி, திருவாரூா், கூத்தாநல்லூா் ஆகிய ஊா்களில் இருந்து விற்பனைக்காக 2,500 செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாகூா் தா்கா குளம் தெரு, பள்ளித் தெரு, தைக்கால் தெரு, மனோவரா வடபுறம் தெரு, தெற்கு தெரு, செய்யது பள்ளி தெரு, பொறையாத்தா கடைத்தெரு, மாலிமாா் தெரு, உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு ஜோடி செம்மறி ஆடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.