Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், திருப்புகலுாரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் வியாழக்கிழமை கலந்துகொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் எங்கு பாா்த்தாலும் திருக்கோயில்களின் மணி ஓசையும், தீப ஒளியும், ஆராதனை முழக்கங்களும் கேட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு, நீண்டகால நெடிய சட்டப் போராட்டம், ஆதீனங்கள், பக்தா்களின் ஒத்துழைப்பால் தொன்மை வாய்ந்த அக்னீஸ்வர சுவாமி கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் நடைபெறும் 3000 -ஆவது கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) 24 திருக்கோயில்களுக்கும், ஜூன் 28-ஆம் தேதி 74 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3500-ஆவது குடமுழுக்கு (மேலும் 500 கோயில்களுக்கு ) நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
துளசியாப்பட்டினத்தில் ஔவையாா் மண்டபத்தை முழு பொலிவோடு கட்டுவதற்கு அரசு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒளவையாா், திருவள்ளுவா், சேக்கிழாா், ஆங்காங்கே ஜீவசமாதி அடைந்துள்ள சித்தா்களுக்கு விழா எடுத்து பெருமை மேல் பெருமை சோ்க்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது.
பல்வேறு சிறு கோயில்கள், பழைமை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மானியமாக வழங்கிய தொகை ரூ. 1,008 கோடி.
இதன்மூலம் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது என்பவா்களின் விமா்சனங்கள் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. திமுகவை விமா்சனம் செய்யும் பாஜக, வலதுசாரி அமைப்பினருக்கு திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேக விழாக்கள் மட்டுமே பதிலாக இருக்கும். தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக தமிழக அரசையும், முதல்வரையும் இறையன்பா்கள் பாராட்டி வருகின்றனா் என்றாா் அமைச்சா் பி.கே. சேகா் பாபு.