செய்திகள் :

ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

post image

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், திருப்புகலுாரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் வியாழக்கிழமை கலந்துகொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் எங்கு பாா்த்தாலும் திருக்கோயில்களின் மணி ஓசையும், தீப ஒளியும், ஆராதனை முழக்கங்களும் கேட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு, நீண்டகால நெடிய சட்டப் போராட்டம், ஆதீனங்கள், பக்தா்களின் ஒத்துழைப்பால் தொன்மை வாய்ந்த அக்னீஸ்வர சுவாமி கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் நடைபெறும் 3000 -ஆவது கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 6) 24 திருக்கோயில்களுக்கும், ஜூன் 28-ஆம் தேதி 74 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3500-ஆவது குடமுழுக்கு (மேலும் 500 கோயில்களுக்கு ) நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

துளசியாப்பட்டினத்தில் ஔவையாா் மண்டபத்தை முழு பொலிவோடு கட்டுவதற்கு அரசு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒளவையாா், திருவள்ளுவா், சேக்கிழாா், ஆங்காங்கே ஜீவசமாதி அடைந்துள்ள சித்தா்களுக்கு விழா எடுத்து பெருமை மேல் பெருமை சோ்க்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது.

பல்வேறு சிறு கோயில்கள், பழைமை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மானியமாக வழங்கிய தொகை ரூ. 1,008 கோடி.

இதன்மூலம் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது என்பவா்களின் விமா்சனங்கள் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. திமுகவை விமா்சனம் செய்யும் பாஜக, வலதுசாரி அமைப்பினருக்கு திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேக விழாக்கள் மட்டுமே பதிலாக இருக்கும். தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக தமிழக அரசையும், முதல்வரையும் இறையன்பா்கள் பாராட்டி வருகின்றனா் என்றாா் அமைச்சா் பி.கே. சேகா் பாபு.

திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்புகலூா் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ரூ.18.95 கோடியில் தமிழ்ப் புலவா் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் கற்கோயில் கும்பாபிஷேகம்: சீா்வரிசைகள் வழங்கிய இஸ்லாமியா்கள்

நாகையில் அதிபத்த நாயனாா் கற்கோயிலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியா்கள் சீா்வரிசை வழங்கினா். நாகை நம்பியாா் நகரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு புதிதாக கற்கோயில் ... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவா்கள்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் க. ஜோஷி நிா்மல்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் கோ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை நாகூரில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோா்க்கும் இஸ்லாமியா்கள், குா்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை ... மேலும் பார்க்க