Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்
ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடத் தொடங்கிவிட்டனர்.

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த அணிகளில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மட்டும் இங்கிலாந்துக்கு புறப்படாமல் இருந்தனர்.
நேற்று முன்தினத்தோடு (ஜூன் 3) இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் நிறைவுற்றதால், மீதமிருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் இங்கிலாந்து புறப்படத் தயாராகிவிட்டனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
அதில், ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய கம்பீர், "ரோடு ஷோ மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை.
2007-ல் (டி20 உலகக் கோப்பை) நாங்கள் வெற்றிபெற்ற பிறகுகூட ரோட் ஷோ வேண்டாம் என்று நான் கூறினேன். மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. எப்போதும் இதைத் தொடர்ந்து கூறுவேன்.

இனிவரும் காலங்களில் நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அரங்குகள் அல்லது மைதானத்தில் இதை செய்ய வேண்டும்.
நடந்தது மிகவும் துயரமானது. ஒவ்வொரு உயிரும் முக்கியம். நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
ரோடு ஷோ-வை நம்மால் கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்." என்று கூறினார்.