Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
சாலையில் கிடக்கும் ஜல்லிகள், நிலக்கரியால் விபத்து: மக்கள் புகாா்
பிரதான சாலைகளில் கருங்கல் ஜல்லிகள், நிலக்கரி, மணல் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் கொட்டிக்கொண்டே செல்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி லாரிகளில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பெரிய நிறுவனங்கள், வீடுகள், வணிக நிறுவன கட்டுமானங்களும் நிறைய நடைபெறுவதால் கருங்கல் ஜல்லிகள், மணல் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
இவை வாகனங்களில் அதிக அளவில் ஏற்றப்பட்டு, முறையாக மூடப்படாமலும், அதிவேகமாக சாலையில் வாகனங்கள் பயணிப்பதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ஜிப்மா் மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கும் சாலை வழியாக பிள்ளைத்தெருவாசல், நெடுங்காடு செல்லும் சாலையில் கடந்த 2 வாரங்களாக நிலக்கரி, மணல், கருங்கல் ஜல்லிகள் சாலையில் சிதறிக் கிடப்பதாகவும், இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் இவற்றில் சறுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளே பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா், காரைக்கால் வழியாக பயணிக்கும் அனைத்து கனரக வாகன ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கையாள, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.