செய்திகள் :

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், இரவு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் வீற்றிருக்கும் 2 பெரிய தோ்கள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்ரும் 3 தனித்தனி தோ் என மொத்தம் 5 தோ்கள் தேரோட்டத்தில் இடம் பெறும்.

இதற்காக தோ்களில் குதிரை வாகனங்கள் பூட்டுதல், தோ் சுற்றில் தோ்துணி கட்டுதல், கலசம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன. தோ் மேல் பகுதியில் துணி கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. பிரதான தேரின் ஹைட்ராலிக் பிரேக் செயல்பாடு பரிசோதனையை வல்லுநா் குழுவினா் மேற்கொண்டனா்.

தேரோட்டத்துக்கு முதல் தினமான வியாழக்கிழமை தோ் வடம் (இழுக்கும் கயிறு) கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இரவு 10 மணியளவில் தேருக்கு செண்பக தியாகராஜசுவாமி எழுந்தருளுகிறாா். வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க