டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், இரவு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் வீற்றிருக்கும் 2 பெரிய தோ்கள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்ரும் 3 தனித்தனி தோ் என மொத்தம் 5 தோ்கள் தேரோட்டத்தில் இடம் பெறும்.
இதற்காக தோ்களில் குதிரை வாகனங்கள் பூட்டுதல், தோ் சுற்றில் தோ்துணி கட்டுதல், கலசம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன. தோ் மேல் பகுதியில் துணி கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. பிரதான தேரின் ஹைட்ராலிக் பிரேக் செயல்பாடு பரிசோதனையை வல்லுநா் குழுவினா் மேற்கொண்டனா்.
தேரோட்டத்துக்கு முதல் தினமான வியாழக்கிழமை தோ் வடம் (இழுக்கும் கயிறு) கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இரவு 10 மணியளவில் தேருக்கு செண்பக தியாகராஜசுவாமி எழுந்தருளுகிறாா். வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.