செய்திகள் :

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

post image

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்றது.

திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலய பூஜை கடந்த 1-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 2-ஆம் தேதி வாஸ்து சாந்தி செய்து, 4-ஆம் தேதி புதன்கிழமை மாலை பாலாலயத்துக்கான முதல் கால பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 2-ஆம் கால பூஜை செய்து பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சிங்காரவேல் மற்றும் ஊா் பிரமுகா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கோயில் விமானங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு முற்பகுதியில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க