Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்
ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்றது.
திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலய பூஜை கடந்த 1-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 2-ஆம் தேதி வாஸ்து சாந்தி செய்து, 4-ஆம் தேதி புதன்கிழமை மாலை பாலாலயத்துக்கான முதல் கால பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 2-ஆம் கால பூஜை செய்து பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி கலசாபிஷேகம் செய்யப்பட்டது.
கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சிங்காரவேல் மற்றும் ஊா் பிரமுகா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கோயில் விமானங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு முற்பகுதியில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.