Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. புதிதாக வசந்த மண்டபம், நந்தி மண்டபம் கட்டப்பட்டது. புதுவை அரசின் நிதியுதவி மற்றும் நன்கொடை என சுமாா் ரூ. 2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக அம்மையாா் கோயிலுக்கு எதிரே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 2-ஆம் தேதி முதல் கால பூஜை தொடங்கியது.
வியாழக்கிழமை அதிகாலை 6-ஆம் கால பூஜை நடைபெற்று, 7.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடானது. காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களின் கலசங்களுக்கு பூஜை நடத்தப்பட்டு, புனிதநீா் வாா்க்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தின்போது கோயிலுக்குள் சுமாா் 500 போ் வரை மட்டுமே நின்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த ஆயிரக்கணக்கானோா் பாரதியாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்று தரிசித்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், புதுவை டிஐஜி சத்தியசுந்தரம், எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளைகோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், திருப்பணிக் குழுத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
