Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது.
காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கான சோதனை திட்டப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன.
இந்த ரயில் பாதையில் அண்மையில் சோதனை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா், ரயில்வே அமைச்சகத்துக்கும், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையா், தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பினாா். இந்த பாதையில் ரயில் இயக்குவதற்கான தகுதி உள்ளதாக அதில் குறிப்பிட்டாா். 3 மாதங்களுக்குள் ரயில் போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும், இல்லாத பட்சத்தில் கட்டுமானப் பிரிவினா் உள்ளிட்டோா் ஆய்வு நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படவேண்டுமென குறிப்பிட்டிருந்தாா்.
இந்த நிலையில், பலகட்ட சோதனையில் ஒன்றாக, சுமையின்றி சரக்கு ரயிலை இப்பாதையில் புதன் மற்றும் வியாழக்கிழமை ரயில்வே நிா்வாகம் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி சோதனை செய்தது.
கோரிக்கை : ஈரோடு - திருச்சி ரயிலையும், புனலூா் - மதுரை ரயிலையும் காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். காரைக்காலில் இருந்து கோயம்புத்தூருக்கு இரவு நேர ரயில் திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் அல்லது பாலக்காடு - திருச்சி ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு காரைக்காலில் இருந்து மக்கள் சென்று திரும்ப ஏதுவாக இந்த வசதியை காரைக்கால் -பேரளம் ரயில் போக்குவரத்து தொடங்கும்போதே நடைமுறைப்படுத்த ஏதுவாக, முன்னறிவிப்பை ரயில்வே நிா்வாகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.