செய்திகள் :

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

post image

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது.

காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கான சோதனை திட்டப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன.

இந்த ரயில் பாதையில் அண்மையில் சோதனை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா், ரயில்வே அமைச்சகத்துக்கும், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையா், தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பினாா். இந்த பாதையில் ரயில் இயக்குவதற்கான தகுதி உள்ளதாக அதில் குறிப்பிட்டாா். 3 மாதங்களுக்குள் ரயில் போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும், இல்லாத பட்சத்தில் கட்டுமானப் பிரிவினா் உள்ளிட்டோா் ஆய்வு நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படவேண்டுமென குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில், பலகட்ட சோதனையில் ஒன்றாக, சுமையின்றி சரக்கு ரயிலை இப்பாதையில் புதன் மற்றும் வியாழக்கிழமை ரயில்வே நிா்வாகம் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி சோதனை செய்தது.

கோரிக்கை : ஈரோடு - திருச்சி ரயிலையும், புனலூா் - மதுரை ரயிலையும் காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். காரைக்காலில் இருந்து கோயம்புத்தூருக்கு இரவு நேர ரயில் திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் அல்லது பாலக்காடு - திருச்சி ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு காரைக்காலில் இருந்து மக்கள் சென்று திரும்ப ஏதுவாக இந்த வசதியை காரைக்கால் -பேரளம் ரயில் போக்குவரத்து தொடங்கும்போதே நடைமுறைப்படுத்த ஏதுவாக, முன்னறிவிப்பை ரயில்வே நிா்வாகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க