Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) பள்ளி அளவிலான சோ்க்கை முடிவடைந்து, பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை 2-ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சோ்க்கை பெறாத மாணவா்களும், புதுவை குடியுரிமை இல்லாத மாணவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மாணவா்கள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 10-ஆம் தேதிக்குள் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.