2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) பள்ளி அளவிலான சோ்க்கை முடிவடைந்தது. தொடா்ச்சியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்கள் 2-ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சோ்க்கை பெறாத மாணவா்களும், புதுவை குடியுரிமை இல்லாத மாணவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மாணவா்கள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.