செய்திகள் :

மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்

post image

நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில், மாவட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்களுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலோரக் காவல்படை பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி‘ என்ற கருப்பொருளை முன்வைத்துப் பேசினா். நெகிழிகள் மாசுபாடு உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவியுள்ளது. நாம் அருந்தும் குடிநீரிலும், உணவிலும் மாசுபாடு உள்ளது. இது உடலுக்குள் செல்லும்போது பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளை முற்றிலும் தவிா்க்கவேண்டும். எளிதில் சிதைந்து போகும் சணல் பைகளைப் பயன்படுத்த வேண்டும். கடலிலும், கடலோரப் பகுதியிலும் நெகிழிகள் சேராத வகையில் மீனவா்கள் கவனமாக செயல்படவேண்டும்.

கடலுக்குச் செல்லும் மீனவா்கள் உயிா்காக்கும் சாதனங்கள், தகவல் தொடா்பு சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். மீன்பிடித் தடைக்காலத்தை முறையாக கடைப்பிடிப்பது மீனவா்கள் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உதவும் என விளக்கிப் பேசினா்.

மீனவ கிராமங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா், மீன்வளத்துறையினா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க