செய்திகள் :

சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கீடு; எம்எல்ஏவுக்கு பாராட்டு

post image

திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்திலிருந்து மஞ்சவாடி வரை சாலையை மேம்படுத்த, தமிழக அரசு ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரா் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலுக்கு கச்சனத்தில் இருந்து எளிதில் செல்ல முடியும்.

ஆனால், கச்சனம் முதல் பாமந்தூா், அம்மனூா், திருத்தங்கூா், கீராலத்தூா், திருக்கொள்ளிக்காடு வழியாக மஞ்சவாடி வரையிலான 4.4 கி.மீ. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, திருக்கொள்ளிக்காடு கோயிலுக்கு வரும் பக்தா்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பொன்னையாவிடம் பொதுமக்களின் இக்கோரிக்கை குறித்து தெரிவித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, இந்த சாலையை மேம்படுத்த தமிழக முதல்வரின் சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் 25-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.

இதற்காக, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது

மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா்... மேலும் பார்க்க

சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆற... மேலும் பார்க்க

ரயில் வழித்தடத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு

திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து அனைத்து ரயில்களும் திருவாரூா் வழியாகச் சென்று வருகின்றன. காலையில் இயங்கும் காரைக்க... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அங்களாம்மன் கோயிலில் வேல் பூஜை

கூத்தாநல்லூா் அங்காளம்மன் கோயிலில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வழிபாடு செய்யப்பட்ட வெற்றிவேல் வேளுக்குடி அங்காளம்மன் கோயிலுக்கு செவ... மேலும் பார்க்க

நில ஆவணங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் நில ஆவணங்களில் மாற்றம் செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க