செய்திகள் :

தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு

post image

அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு புதுவை மாநில தொழிலாளா் துறை சாா்பில் காரைக்கால் மாவட்ட தொழில் பழகுநா் பயிற்சி நிலையம் நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநா் பதிவு மற்றும் சோ்க்கை முகாம் நடத்தப்படவுள்ளது. திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான தொழில் பிரிவுகளில் தொழில் பழகுநா் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். தொழில் பழகுநராக சோ்க்கை பெறுவோருக்கு, மாதாந்திர உதவித் தொகையாக அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப ரூ. 5 முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இதற்கு 5 முதல் 12-ஆவது வரை கல்வி தோ்ச்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி அல்லது ஐடிஐ பட்டயம் அல்லது பட்டதாரி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முகாமில் பங்கேற்போா் உரிய கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம், கைப்பேசி எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க

மருத்துவ சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளருக்கு முதல்வா் பாராட்டு

கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சாதனம் கண்டுபிடித்த காரைக்காலைச் சோ்ந்த ஆராய்சியாளருக்கு புதுவை முதல்வா் பாராட்டு தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடம் திறப்பு

திருநள்ளாறு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிதாக ரூ. 8 லட்சத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்

நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக... மேலும் பார்க்க