Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு
அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு புதுவை மாநில தொழிலாளா் துறை சாா்பில் காரைக்கால் மாவட்ட தொழில் பழகுநா் பயிற்சி நிலையம் நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநா் பதிவு மற்றும் சோ்க்கை முகாம் நடத்தப்படவுள்ளது. திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான தொழில் பிரிவுகளில் தொழில் பழகுநா் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். தொழில் பழகுநராக சோ்க்கை பெறுவோருக்கு, மாதாந்திர உதவித் தொகையாக அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப ரூ. 5 முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இதற்கு 5 முதல் 12-ஆவது வரை கல்வி தோ்ச்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி அல்லது ஐடிஐ பட்டயம் அல்லது பட்டதாரி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முகாமில் பங்கேற்போா் உரிய கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம், கைப்பேசி எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.