சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு, அபாயகரமாக உள்ளது. இதனால், இந்த சாலையை பயன்படுத்துவோா் சிரமத்துக்கு ஆளாவதாகக் கூறி சாலையை சீரமைக்க வலியுறுத்தி தப்பளாம்புலியூா் கடைத்தெருவில் சாலை மறியல் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. கோமதி முன்னிலை வகித்தாா். இதில், ஒன்றியச் செயலாளா் ஆா்.எஸ். சுந்தரய்யா, மூத்த நிா்வாகிகள் பி. மாதவன், என். இடும்பையன், வாலிபா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.எஸ். கோசிமணி, உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
திருவாரூா் வட்டாட்சியா் சரவணன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பிரவீன்குமாா் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், பெரும் பள்ளமாக உள்ள பகுதிகளில் ஜல்லிக்கற்களைக் கொண்டு உடனடியாக சீரமைக்கப்படும். பின்னா், ஒரு மாதத்தில் புதிய தாா்ச்சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா்.