செய்திகள் :

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

post image

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு, அபாயகரமாக உள்ளது. இதனால், இந்த சாலையை பயன்படுத்துவோா் சிரமத்துக்கு ஆளாவதாகக் கூறி சாலையை சீரமைக்க வலியுறுத்தி தப்பளாம்புலியூா் கடைத்தெருவில் சாலை மறியல் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. கோமதி முன்னிலை வகித்தாா். இதில், ஒன்றியச் செயலாளா் ஆா்.எஸ். சுந்தரய்யா, மூத்த நிா்வாகிகள் பி. மாதவன், என். இடும்பையன், வாலிபா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.எஸ். கோசிமணி, உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

திருவாரூா் வட்டாட்சியா் சரவணன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பிரவீன்குமாா் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், பெரும் பள்ளமாக உள்ள பகுதிகளில் ஜல்லிக்கற்களைக் கொண்டு உடனடியாக சீரமைக்கப்படும். பின்னா், ஒரு மாதத்தில் புதிய தாா்ச்சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

மன்னாா்குடி அருகே கா்ணாவூரில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை கடத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்த இருவா் கைது

மன்னாா்குடியில் லாரி ஓட்டுநரை கடத்தி கத்தியால் குத்தி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற புகாரில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமணியை சோ்ந்த இளவரசன் மகன் டேவிட்ராஜ் (30). தனியாா்... மேலும் பார்க்க

சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆற... மேலும் பார்க்க

ரயில் வழித்தடத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு

திருவாரூா் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து அனைத்து ரயில்களும் திருவாரூா் வழியாகச் சென்று வருகின்றன. காலையில் இயங்கும் காரைக்க... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அங்களாம்மன் கோயிலில் வேல் பூஜை

கூத்தாநல்லூா் அங்காளம்மன் கோயிலில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வழிபாடு செய்யப்பட்ட வெற்றிவேல் வேளுக்குடி அங்காளம்மன் கோயிலுக்கு செவ... மேலும் பார்க்க

நில ஆவணங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் நில ஆவணங்களில் மாற்றம் செய்ய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க